பாடல்: நதிக்கரை ஓரத்து நாணல்களே
திரைப்படம்: காதல் கிளிகள்
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
தரையைத்தொடாத தென்றலைப்போல்
உன் தாமரைப்பாதங்கள் நடப்பதென்ன
கல்யாண தேதியை கேட்டவுடன்
என் கால்கள் த்ரையைத் தொடவில்லையே
கரையைத்தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
செம்மண் பூமியில் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்
உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்
No comments:
Post a Comment