பாடல்: வைகரைத்தென்றல் தாலாட்ட
திரைப்படம்: தாலாட்டத் தாய் வேண்டும்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்
வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட
குங்குமச்சிமிழே வாராயோ
கோகுலக்குயிலே பாடாயோ
வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட
சோலைக்குயிலின் ஆசைகளோ
கானல் நிலத்து நீரலையோ
ஜோடிக்குயில் பேடையொன்று பாடுகின்றதே
வாழ ஒரு கூடுதேடி வாடுகின்றதே
விதிதான் வலிதோ இதுவோ தலைவிதி
வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட
பூவை நனைத்து மேகங்களோ
பாதை மறந்தே போனதடா
காலம் வரும் காலமென்று காத்திருந்தேனே
கண்ணருகில் நீரலைகள் மோத நின்றேனே
பொறுத்தே இருப்பேன் திருநாள் வரும்வரை
வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட
குங்குமச்சிமிழே வாராயோ
கோகுலக்குயிலே பாடாயோ
ஆராரிரோ ஆரிரரோ
ஆராரிரோ ஆரிரரோ
ஓ ஆரிரரோ ஓ ஆரிரரோ
No comments:
Post a Comment