Saturday, September 8, 2012

காற்றுக்கென்ன வேலி - அவர்கள்

பாடல்: காற்றுக்கென்ன வேலி
திரைப்படம்: அவர்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி
 
காற்றுக்கென்ன வேலி...கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது

தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னைக்கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளையானேன் பேசிப்பேசி கிள்ளையானேன்
கோவில்விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது

No comments: