பாடல்: ஶ்ரீதேவி என் வாழ்வில்
திரைப்படம்: இளமை கோலம்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
மானைப்போல கண்கள் ரெண்டும் எனைப்பார்க்குமா
வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையிலா கலைவாணி கருணை பொங்குமா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
கோயில் வாசல் தேடித்தேடி அலை பாய்ந்ததே
தேவதேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக்கண்டேன் நல்ல நேரமே
இணையிலா கலைவாணி கருணை பொங்குமா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
கண்டக மணியோசை பொங்க தண்டை தனது தாளம் கொஞ்ச
மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும்
இளைய தோகை அழகு மங்கை இனிய ராகம் பாடி ஆடி
திரண்டு குலுங்கும் இரண்டு கோவைபோன்ற இதழ்களோடும்
சிறந்ததொரு விருந்துயென துணை வருவது அது தருவது
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
No comments:
Post a Comment