Sunday, September 16, 2012

பாடிவா தென்றலே - முடிவில்லா ஆரம்பம்

பாடல்: பாடிவா தென்றலே
திரைப்படம்: முடிவில்லா ஆரம்பம்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயசந்திரன்

லால்லலா லால்லலா
லல லால்லா லால்லா லல்லா
லால்ல லால்லா லால்ல லால்லா
லால்ல லால்லா லால்லா லல்லா

பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே
பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

காதல் நாள் பார்க்குமா
இரு தேகம் தோள் சேர்க்குமா
வானம் பார்த்த பூமி எங்கும்
கோடை மேகம் நீர் வார்க்குமா

காதல் நாள் பார்க்குமா
இரு தேகம் தோள் சேர்க்குமா
வானம் பார்த்த பூமி எங்கும்
கோடை மேகம் நீர் வார்க்குமா
என் வாசலில் இனிமேல் மாக்கோலம்
இனி வாசனை வீசும் ராக்காலம்
தேனில் தோய்ந்த ஈரம் காயாமல்
பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

பூவே செண்டானது
ஒரு போதை உண்டானது
சேலை கொண்ட சோலை ஒன்று
வாசல் வந்தால் என்னாவது

பூவே செண்டானது
ஒரு போதை உண்டானது
சேலை கொண்ட சோலை ஒன்று
வாசல் வந்தால் என்னாவது
என் பார்வையில் இவளே பகலானாள்
அந்த சீதையும் இவளின் நகலானாள்
தேனில் தோய்ந்த ஈரம் காயாமல்
பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

லால்லலா லால்லலா
லல லால்லா லால்லா லல்லா
லால்ல லால்லா லால்ல லால்லா
லால்ல லால்லா லால்லா லல்லா

No comments: