Saturday, September 8, 2012

அன்பு முகம் தந்த சுகம் - ருசி கண்ட பூனை

பாடல்: அன்பு முகம் தந்த சுகம்
திரைப்படம்: ருசி கண்ட பூனை
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால்...போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்துவிட்டாள் நினைப்பதும் பாவம்
பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்துவிட்டாள் நினைப்பதும் பாவம்
ஆஆஆஆ...நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
நீ சொன்ன வார்த்தைகள் போனது காற்றினிலே

அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால்...போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில்
நடந்துவிட்டோம் விதிவழியே இனியென்ன ஏக்கம்
நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில்
நடந்துவிட்டோம் விதிவழியே இனியென்ன ஏக்கம்
ஆஆஆஆ...நான் உன்னை நேசிக்க நீ என்னை வஞ்சிக்க
காலங்கள் போனது யாரிடம் கேட்பதம்மா

அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால்...போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா

No comments: