Friday, September 14, 2012

மேலாடை மேகத்தில் நீந்தும் - அக்கரைக்கு வாரீகளா

பாடல்: மேலாடை மேகத்தில் நீந்தும்
திரைப்படம்: அக்கரைக்கு வாரீகளா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ தானோ

மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ தானோ

பால் போல ஓடை பூந்தென்றலாட
செந்தூரக்கோலம் கொண்டதென்ன
பால் போல ஓடை பூந்தென்றலாட
செந்தூரக்கோலம் கொண்டதென்ன
தாலாட்டும் வேளை மையாடும் கண்ணில்
பொய்யாக கோபம் வந்ததென்ன
தாலாட்டும் வேளை மையாடும் கண்ணில்
பொய்யாக கோபம் வந்ததென்ன
நதியின்மீது அலையின் ஆடல் இனிய நினைவிலோ
கொடியைத்தேடி உலவும் காற்று உறவை பொழியுதோ

மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ தானோ

செவ்வாழைக்காலும் செவ்வல்லிப்பூவும்
துள்ளாமல் துள்ளும் நேரத்திலே
செவ்வாழைக்காலும் செவ்வல்லிப்பூவும்
துள்ளாமல் துள்ளும் நேரத்திலே
செந்தேனை உண்டு சிங்கார வண்டு
சங்கீதம் பாடும் மோகத்திலே
செந்தேனை உண்டு சிங்கார வண்டு
சங்கீதம் பாடும் மோகத்திலே
தனிமை வேளை இளமை வேகம் உடலில் தவழுதே
அழகில் ஆடும் சிலையைத்தேடி மனமும் அலையுதே

மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ தானோ

No comments: