Saturday, September 8, 2012

மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா

பாடல்: மலரே குறிஞ்சி மலரே
திரைப்படம்: டாக்டர் சிவா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
 
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே


யார்மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய்மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ


கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ


நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்


தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்


தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே


பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்


பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு

நல்வாழ்த்து கூறுங்களேன்

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
 

No comments: