Saturday, September 22, 2012

கண்கள் தூங்காத கண்கள் - பொட்டு வச்ச நேரம்

பாடல்: கண்கள் தூங்காத கண்கள்
திரைப்படம்: பொட்டு வச்ச நேரம்
இசை:
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & உமா ரமணன்

ஆராரோ...ஆரிரோ
கண்கள் தூங்காத கண்கள் காயம் என்னென்ன நெஞ்சில்
இன்று நீ தூங்கு கிளியே என்றும் நான் உந்தன் அருகே
உயிரின் உயிரே உனக்கேன் வருத்தம்
விழியே விழியே உனக்கேன் கலக்கம்
ஆராரோ...ஆரிரோ

தாழம்பூவே உன்னை மடியினில் தாங்கிக்கொள்ளவோ
தாயே உந்தன் துன்பம் முழுவதும் வாங்கிக்கொள்ளவோ
பொன்னாரமே...பூவாரமே
முத்தாரம் ஏனோ கண்ணில் இன்று சூடிக்கொண்டாய்
கண்கள் தூங்காத கண்கள் காயம் என்னென்ன நெஞ்சில்
இன்று நீ தூங்கு கிளியே என்றும் நான் உந்தன் அருகே

கண்ணே உந்தன் கண்ணில் உலகினை நானும் பார்க்கிறேன்
உன்னை நெஞ்சில் வைத்தே இதுவரை நானும் வாழ்கிறேன்
உன் வானிலே...ஒரு நாளிலே
பூபாளம் கேட்கும் நேரம் வந்து சேரும் அம்மா
கண்கள் தூங்காத கண்கள் காயம் என்னென்ன நெஞ்சில்
இன்று நீ தூங்கு கிளியே என்றும் நான் உந்தன் அருகே

உயிரின் உயிரே உனக்கேன் வருத்தம்
விழியே விழியே உனக்கேன் கலக்கம்

No comments: