Saturday, September 22, 2012

யாரோ யாரோ யாரோடு யாரோ - பணம் பத்தும் செய்யும்

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ
திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று


யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று


அருகினிலே பருவ நிலா
இரு விழியில் வசந்த விழா
நானும் காண நீயும் நாண

இள மனதும் இள வயதும்
முதன் முறையாய் மயங்குகையில்
மோகம் கூட தேகம் வாட

மெதுவாய் மடிமேல் ஏந்திக் கொண்டு
மெதுவாய் மடிமேல் ஏந்திக் கொண்டு

மீட்டும் வீணை நானோ
மீட்டும் வீணை நானோ


யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று

தினம் தினமும் பகல் இரவும்
வித விதமாய் பல கனவு
தோன்றும் போது தூக்கம் ஏது

பனிமலரே உனை நினைத்து
தனிமையிலே தவி தவித்து
ஏங்கும் ஏக்கம் என்று தீரும்

ஒரு நாள் திருநாள் மாலை கொள்ள
ஒரு நாள் திருநாள் மாலை கொள்ள

பூவை நானும் கிள்ள
பூவை நானும் கிள்ள


யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று
லா லா லா லா லாலா லா லா லா லா லாலா
லா லா லா லா லாலா லா லா லா லா லாலா

No comments: