Saturday, September 22, 2012

சுகந்தம் மணக்கின்ற வசந்தம் - மீண்டும் பல்லவி

பாடல்: சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
திரைப்படம்: மீண்டும் பல்லவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & பி.சுசீலா

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்
ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்
உறங்கும் மயிலே எழுந்தாடி வா
இனிக்கும் கனவே இதழின் தேன் தரவா

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சம் மயங்கும்


ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்
நாள்தோறும் தேன் சிந்துவான்

பூவிழி நாயகி புன்னகை மோகினி
ஆனந்த நீராடுவாள்

தினமும் இரவில் தீபாவளி
விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சம் மயங்கும்


காவிய மேகமே பூமழை தூவுமே
என் செல்வம் நீதானடி

கல்வியில் மேன்மைகள் கண்களில் ஞானங்கள்
சேராதோ என் செல்வமே

இதயம் முழுதும் தேனோடுமே
மகனின் வழியில் மரங்கள் பூத்தூவுமே

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்


பொங்கிடும் தேன் தரும் சந்தனப்பூமரம்
மணம் ஆகும் நாளும் வரும்

மன்மத வேளையில் மக்கல மேடையில்
பூச்சூடவும் சோலை வரும்

எனது விழியில் மழைக்காலமே
வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்
 

No comments: