Saturday, September 22, 2012

கண்கள் பொல்லாத கண்கள் - பொட்டு வச்ச நேரம்

பாடல்: கண்கள் பொல்லாத கண்கள்
திரைப்படம்: பொட்டு வச்ச நேரம்
இசை:
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா

ஏன் ஏன்...நான் மாறினேன்
ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்
எதையோ நினைத்தேன் எனை நான் மறந்தேன்
இதுதான் சுகமோ தினமும் வருமோ

ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்

மேலும் கீழும் ஆடும் இளமனம் ஊஞ்சலானது
மின்னல் கோலம் போடும் இருவிழி போதை ஏறுது
தொடு என்பதா...விடு என்பதா
பனிவாடை நேரம் நீயா காதல் தீயை வைத்தாய்

ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்
எதையோ நினைத்தேன் எனை நான் மறந்தேன்
இதுதான் சுகமோ தினமும் வருமோ

தூண்டில் போடும் கண்கள் மனதினில் காயம் செய்ததோ
தோளில் உந்தன் கைகள் தழுவிட காயம் ஆறுமோ
பரிமாறவோ...பசியாறவோ
கலையாத ஆடை காற்றில் பாதி கையில் பாதி

ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்
எதையோ நினைத்தேன் எனை நான் மறந்தேன்
இதுதான் சுகமோ தினமும் வருமோ
ஏன் ஏன்...நான் மாறினேன்
ஏன் ஏன்...நான் மாறினேன்
 

No comments: