Saturday, September 22, 2012

வா கடல் அலையே - வா கடல் அலையே

பாடல்: வா கடல் அலையே
திரைப்படம்: வா கடல் அலையே
இசை: T.ஜெய்குமார்
பாடியவர்: ஜெயசந்திரன்

வா கடல் அலையே வளரும் நிலவோடு வா
வா கடல் அலையே வளரும் நிலவோடு வா

எண்ணங்கள் மலர்வது இயற்கைகள் மலர்வது
இன்பங்கள் தெரிவது உணர்ச்சிகள் வருவது எதற்காக
உன்னோடு நான் வாழ என்னோடு நீ சேர
எல்லாமே அதுதான் இதுக்காக

வா கடல் அலையே வளரும் நிலவோடு வா

இனிமை ராகத்தில் உனை நான் பாட
புதுமை சுகத்தில் உனை நான் தேட
இனிமை ராகத்தில் உனை நான் பாட
புதுமை சுகத்தில் உனை நான் தேட
வரும் வண்டினின் கூட்டம்
மலர் பருவத்தைத் தேடி
என் விழிகளின் ஓட்டம்
உன் இதழ்களை நாடி

இது வான தேவதையின் விளையாட்டு
இது காதல் கவிதைகளின் சீராட்டு
இது இந்த மழைதனிலே தோராட்டு
இது வாழ்வின் ஆசையில் தாலாட்டு

வா கடல் அலையே வளரும் நிலவோடு வா
வா கடல் அலையே வளரும் நிலவோடு வா
வளரும் நிலவோடு வா

No comments: