பாடல்: எந்தன் மனம் ஒரு நந்தவனம்
திரைப்படம்: தாலாட்டத்தாய் வேண்டும்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: ஜெயசந்திரன்
எந்தன் மனம் ஒரு நந்தவனம்
இன்று முதல் அது உந்தன் வசம்
என் கண்ணில் மலரும் காலைப்பொழுதே
கண்ணில் மலரும் காலைப்பொழுதே
ஆனந்த மேடை கொடு
நீ அய்க்கியம் ஆகி விடு
எந்தன் மனம் ஒரு நந்தவனம்
அன்னையின் ஆசை மங்கலமாக
வருவாய் பூ முடித்து
ஆறுதல் தேடும் ஆண்மை நெஞ்சை
ஆதரி தோள் கொடுத்து
பொன்னாரமே இன்பத் தேனாரமே
இன்பத் தேனாகவே தரும் பூமன்றமே
எந்தன் மனம் ஒரு நந்தவனம்
கண்ணகி பெண்ணின் காவிய பண்பு
உன்னிடம் இருக்கின்றதா
நான் கோவலன் அல்லன் வேறிடம் செல்ல
உண்மை புரிகின்றதா
செந்தூரமே இன்ப சிம்மாசனம்
நீயும் தந்தாகணும் உயிர் ஒன்றாகணும்
எந்தன் மனம் ஒரு நந்தவனம்
இன்று முதல் அது உந்தன் வசம்
என் கண்ணில் மலரும் காலைப்பொழுதே
கண்ணில் மலரும் காலைப்பொழுதே
ஆனந்த மேடை கொடு
நீ அய்க்கியம் ஆகி விடு
எந்தன் மனம் ஒரு நந்தவனம்
No comments:
Post a Comment