Thursday, September 20, 2012

ஞாபகம் இல்லையோ கண்ணே - மலர்களே மலருங்கள்

பாடல்: ஞாபகம் இல்லையோ கண்ணே
திரைப்படம்: மலர்களே மலருங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ


பாடுவது உனை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே

ஆ ஆஆஆ...ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி அதில் காணும் நிம்மதி
தினம் தேடித்தேடி பாடும் ஏழை மனம்


ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ

பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ


நெஞ்சமதில் அந்த நினைவவென்னும் வண்ணம்
எண்ணுகின்றேன் அவை அழியாத எண்ணம்
எந்தன் முன் ஜென்மத்தின் புண்ணியம்

ஆ ஆஆஆ...எந்தன் முன் ஜென்மத்தின் புண்ணியம்
உனை காண நேர்ந்தது இசை பாட சேர்ந்தது
இனி இன்றுபோல வாழும் என் மனது


ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ

பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்

ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ

No comments: