Saturday, September 8, 2012

நான் ஒன்ன நெனச்சேன் - கண்ணில் தெரியும் கதைகள்

பாடல்: நான் ஒன்ன நெனச்சேன்
திரைப்படம்: கண்ணில் தெரியும் கதைகள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜிக்கி & வாணி ஜெயராம்

நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு
நித்தம் நித்தம் பூத்தாயே
நான் பறிச்ச ரோசாவே
இனிமே எப்ப வரும் பூவாசம்
செல்லம்மா என்னம்மா சொல்லம்மா
நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

அப்போ வந்து வாங்கித்தந்தே பூச்சேல
நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே
அம்மன் சிலை இங்கே தான்
ஆடித் தேரு அங்கே தான்
இருந்தா கோயில் கொளம் ஏனைய்யா
செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா
நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட
உன்னத்தொட்டு நான் வாரேன்
என்னவிட்டு ஏன் போறே
நிழல்போல் கூட வந்தா ஆகாதோ
செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா
நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
ஒன்னாலே நெஞ்சு புண்ணாச்சு

நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு

நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

No comments: