Saturday, September 8, 2012

அந்தி மயங்கும் நேரத்திலே - மாப்பிள்ளை சிங்கம்

பாடல்: அந்தி மயங்கும் நேரத்திலே
திரைப்படம்: மாப்பிள்ளை சிங்கம்
இசை:
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடிவரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ஆடிவரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு

பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும்
பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும்
நினைவுகள் தூங்கும் போதும்
என் நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்
நெஞ்சத்தில் அவள் முகம் மலரும் ம்ம் ம்ம் ம்ம்ம்

அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடிவரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே

மலையில் அருவிவிழும் மங்கை இவள் கருவிழியும்
மலையில் அருவிவிழும் மங்கை இவள் கருவிழியும்
மலர்கள் ஓயும் போதும்
இவள் கனி இதழில் தேன்துளி சொட்டும்
கனி இதழில் தேன்துளி சொட்டும் ம்ம் ம்ம் ம்ம்ம்

அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடிவரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே

No comments: