பாடல்: நினைப்பது நிறைவேறும்
திரைப்படம்: நினைப்பது நிறைவேறும்
இசை: எம்.எல்.ஶ்ரீகாந்த்
பாடியவர்கள்: எம்.எல்.ஶ்ரீகாந்த் & வாணி ஜெயராம்
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது
தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு
காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
1 comment:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
- மகாகவி
தமிழுக்கும் அமுதென்று பேர்!
- பாரதிதாசன்
நினைப்பது நிறைவேறும்; நீ இருந்தால் என்னோடு;
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு.
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு;
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு.
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
தனிமை உனக்கேது; தாங்கும் இதயம் எனக்கேது;
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு.
தேன் சுவைத்தமிழ் பேசி; தெம்மாங்கு இசைபாடி;
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்.
காதல் கவிபாடு; காலமெல்லாம் உறவாடு;
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது.
- கவிஞர் மணி.
கண்களை மூடி; ஆகாய வீதியில்;கனவுலகில்;அந்தரத்தில்...
- நான்
Post a Comment