Friday, September 14, 2012

மலைச்சாரலில் இளம் பூங்குயில் - ஒரு குடும்பத்தின் கதை

பாடல்: மலைச்சாரலில் இளம் பூங்குயில்
திரைப்படம்: ஒரு குடும்பத்தின் கதை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & பி.எஸ்.சசிரேகா

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழைகூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழிதேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

1 comment:

Ekambaram j said...

இசை சலீல் சௌத்ரீ..1975